Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசில் நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது

பிரேசில் நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது

By: Karunakaran Tue, 30 June 2020 11:40:43 AM

பிரேசில் நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 13.70 லட்சத்தைக் கடந்துள்ளது.

coronavirus,brazil,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், பிரேசில், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

கடந்த சில நாட்களாக 20 முதல் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷ்யா நாடு கொரோனா அதிகம் பாதித்த நாடாக உள்ளது. 4-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|