Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு; ஒரே நாளில் 28 பேர் பலி

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு; ஒரே நாளில் 28 பேர் பலி

By: Monisha Wed, 08 July 2020 10:58:31 AM

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு; ஒரே நாளில் 28 பேர் பலி

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

chennai,coronavirus,death,treatment,tamil nadu ,சென்னை,கொரோனா வைரஸ்,உயிரிழப்பு,சிகிச்சை,தமிழ்நாடு

சென்னையில் 71 ஆயிரத்து 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags :
|