Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு - எடியூரப்பா

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு - எடியூரப்பா

By: Karunakaran Wed, 24 June 2020 12:16:50 PM

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு - எடியூரப்பா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிர மாநிலம் நாட்டிலே முதலிடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 8 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக உள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக உள்ளது. கொரோனா பாதித்த பொதுமக்களோ அல்லது அரசு ஊழியர்களை பயப்பட தேவை இல்லை. உங்களுடன் அரசு எப்போதும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

yeddyurappa,karnataka,coronavirus,corona death ,எடியூரப்பா,கொரோனா உயிரிழப்பு,கர்நாடகா,கொரோனா வைரஸ்

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ்காரர் மஞ்சேஷ், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது துக்கத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

போலீசார், கொரோனா தடுப்பு பணிகளில் முன்களத்தில் நின்று தங்களின் உயிரையே பணயம் வைத்து பணியாற்றுவதால், போலீசாருக்கு என்றே பிரத்யேகமாக ஒரு பரிசோதனை மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்

Tags :