- வீடு›
- செய்திகள்›
- பாபா ராம்தேவ் அறிவித்த கொரோனா மருந்து; குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ஆயுர்வேத மருத்துவர்கள்
பாபா ராம்தேவ் அறிவித்த கொரோனா மருந்து; குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ஆயுர்வேத மருத்துவர்கள்
By: Nagaraj Tue, 23 June 2020 8:57:56 PM
பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவின் அறிவிப்புதான் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ளதுதான் அது.
இந்நிலையில் அலோபதி மருந்துகள், பாரம்பர்ய மருத்துவ முறைகளில் உள்ள மருந்துகள் என எந்த மருந்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடும்போதும், அந்த மருந்து எந்த வகையில் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டும்.
மேலும், அந்த மருந்தில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன, பக்கவிளைவுகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மருந்தைப் பற்றி எந்த விவரமும் வெளியிடவில்லை. அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தகவல்களையும் கூறவில்லை. நேரடியாக கொரோனா வைரஸுக்கான மருந்து என்று தெரிவித்துள்ளார்.
இது, பிற ஆயுர்வேத மருத்துவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. "இந்த மருந்து விற்பனைக்கு வந்த பிறகே அதன் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும். எனவே, பொதுமக்கள் புதிய மருந்துகளை மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும்" என்று ஆயுர்வேத மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.