நாட்கள் கடந்து கொரோனா பரிசோதனை செய்தால் தவறான முடிவுகள் காட்ட வாய்ப்பு
By: Nagaraj Sun, 07 June 2020 1:59:57 PM
தவறான முடிவை காட்டும் பரிசோதனை... கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்து, 21 சதவீதம் அளவுக்கு, அதாவது 5-ல் ஒருவருக்கு தவறான முடிவை காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் என்ற பரிசோதனை முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 5 பரிசோதனைகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் முடிவு தவறாகக் காட்டப்பட வாய்ப்பிருப்பதாக, அமெரிக்காவின் பால்டிமோரை சேர்ந்த, Johns Hopkins Medicine விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த துல்லியத்தன்மை வேறுபடுகிறது.
முதல் 5 நாட்களுக்குள் எடுக்கும்போது, பரிசோதனை முடிவு 67 சதவீதம் தவறாகப்போக வாய்ப்பிருப்பதாகவும், 8ஆவது நாளில் எடுக்கும்போது, பரிசோதனை முடிவு தவறாகப் போய்விடுவதற்கான வாய்ப்பு 21 சதவீதமாகக் குறைந்து விடுவதாகவும் ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.