செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,718 ஆக உயர்வு
By: Monisha Sat, 27 June 2020 12:26:02 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,718 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,463 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.