Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,776 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,776 ஆக அதிகரிப்பு

By: Monisha Tue, 02 June 2020 12:23:25 PM

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,776 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக அதிகரித்துள்ளது. 8,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 138-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

tamil nadu,chennai,coronavirus,chennai corporation,raipur ,தமிழ்நாடு,சென்னை,கொரோனா வைரஸ்,சென்னை மாநகராட்சி,ராயபுரம்

கோடம்பாக்கத்தில் 1,867 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,651 பேருக்கும், அண்ணாநகரில் 1,341 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 1,839 பேரும், தேனாம்பேட்டையில் 1,770 பேரும், திருவொற்றியூரில் 534 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 890 பேருக்கும், பெருங்குடியில் 263 பேருக்கும், அடையாறில் 883 பேருக்கும், அம்பத்தூரில் 587 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 229 பேருக்கும், மாதவரத்தில் 378 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 262 பேருக்கும், மணலியில் 222 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :