சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,149 ஆக அதிகரிப்பு
By: Monisha Mon, 08 June 2020 12:12:14 PM
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. 10,954 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 212-ஆக உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 2,431 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,167 பேருக்கும், அண்ணாநகரில் 1,974 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 2,835 பேரும், தேனாம்பேட்டையில் 2,518 பேரும், திருவொற்றியூரில் 813 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,054 பேருக்கும், பெருங்குடியில் 415 பேருக்கும், அடையாறில் 1,274 பேருக்கும், அம்பத்தூரில் 807 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 400 பேருக்கும், மாதவரத்தில் 614 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 390 பேருக்கும், மணலியில் 328 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.