திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 543ஆக உயர்வு
By: Monisha Mon, 06 July 2020 11:51:30 AM
திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 539 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 539 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 543ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 348 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநில அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு செல்லக்கூடாது என்றும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.