வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,225ஆக உயர்வு
By: Monisha Tue, 07 July 2020 10:13:47 AM
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருந்தது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,225ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் 854 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,371 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.