Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,618 ஆக உயர்வு

திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,618 ஆக உயர்வு

By: Monisha Sat, 27 June 2020 6:39:42 PM

திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,618 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,498 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 74,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.

thiruvannamalai,coronavirus,influence,treatment,kills ,திருவண்ணாமலை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,498 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 40 பெண்கள், 6 குழந்தைகள், 3 சுகாதார பணியாளர்கள் உட்பட 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,618 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 573 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :