Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும்

நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும்

By: Monisha Sat, 06 June 2020 09:28:21 AM

நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று: ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் அனைத்து அரசுத்துறையின் இயல்பு நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாகியது. அதேபோல் நீதித்துறையிலும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டும் காணொலிக்காட்சி மூலம் விசாரிக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வழக்குகளும் காணொலிக்காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் பணியாற்றும் துணைப்பதிவாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

judges,corona virus,high court,6 sessions,prosecution ,நீதிபதிகள்,கொரோனா வைரஸ்,ஐகோர்ட்,6 அமர்வுகள்,வழக்கு விசாரணை

இதையடுத்து ஐகோர்ட்டு நிர்வாகம், ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் என்று அறிவித்து உள்ளது. அதன்படி நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் தலைமையில் மற்றொரு டிவிசன் பெஞ்ச் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 அமர்வுகளும் டிவிசன் பெஞ்ச் விசாரிக்கும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும். அதே போன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக அமர்வுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Tags :
|