கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1246 ஆக உயர்வு
By: Monisha Tue, 07 July 2020 2:51:23 PM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 1205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து நேற்று 280 பேர்களின் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1205-ல் இருந்து 1246 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.