கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 962 ஆக உயர்வு
By: Monisha Thu, 09 July 2020 09:51:27 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 872 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 336 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு வீடாக சோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.