Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 என அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 என அதிகரிப்பு

By: Monisha Mon, 29 June 2020 09:45:57 AM

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 என அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக 3000ஐ தாண்டிய நிலையில் நேற்று 4000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் நேற்று 3940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 என அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் 1939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் மொத்தம் 53,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக உச்சபட்சமாக மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 183 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 114 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,influence,kills,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 54 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ முதல்முறையாக தாண்டியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,443 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 45,537 பேர்கள் குணமாகியுள்ளனர்.

மேலும் நேற்று தமிழகத்தில் 32,948 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 11,10,402 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|