தேனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 344 ஆக உயர்வு
By: Monisha Wed, 24 June 2020 1:56:12 PM
தேனியில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனியிலும் இன்று முதல் முழு ஊரடங்கு அமலாகிறது.
தேனியில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தேனியில் கொரோனாவுக்கு 129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.