திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,313 ஆக உயர்வு
By: Monisha Tue, 23 June 2020 5:17:36 PM
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,199 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32,752 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,199 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.