Advertisement

தேனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,119 ஆக உயர்வு

By: Monisha Mon, 06 July 2020 4:28:41 PM

தேனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,119 ஆக உயர்வு

தேனியில் ஏற்கனவே 1009 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

theni,coronavirus,infected,killed,treatment ,தேனி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் தேனியில் ஏற்கனவே 1009 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,119 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 368 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் பல்வேறு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு செல்லக்கூடாது என்றும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
|
|