தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்வு
By: Monisha Wed, 17 June 2020 10:54:14 AM
தமிழக்தில் நேற்று மட்டும் 1,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 3,54,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2003 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக 1500-க்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று 1,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், இதுவரை இல்லாத அளவிற்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இறந்தவர்களில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
நேற்று ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,48,244 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.