Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலங்கானா ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

தெலங்கானா ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

By: Nagaraj Sat, 13 June 2020 8:19:53 PM

தெலங்கானா ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு... தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வரும் அவர், தெலங்கானா உருவான தினத்தைக் கொண்டாடுவதற்காக கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொகுதிக்குச் சென்றிருந்தார். இதையடுத்து, மற்றொரு நிகழ்ச்சிக்காக மீண்டும் ஜூன் 5-ஆம் தேதி தொகுதிக்குச் சென்றார். எனவே, தொகுதி பயணத்தின்போது எம்எல்ஏ-வுடன் இருந்தவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கண்டறியும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

mla,loneliness,corona,affirmation,vulnerability ,எம்எல்ஏ, தனிமை, கொரோனா, உறுதி, பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ள முதல் தெலங்கானா எம்எல்ஏ இவர்தான். இதனிடையே, நிதியமைச்சர் ஹரீஷ் ராவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமைச்சரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த 17 பேருக்கும் வெள்ளிக்கிழமை தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|