Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவின் புதிய 3 அறிகுறிகள் குறித்து அறிவிப்பு வெளியானது

கொரோனாவின் புதிய 3 அறிகுறிகள் குறித்து அறிவிப்பு வெளியானது

By: Nagaraj Mon, 29 June 2020 12:03:06 PM

கொரோனாவின் புதிய 3 அறிகுறிகள் குறித்து அறிவிப்பு வெளியானது

புதிய அறிகுறிகள்... கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

the impact of illness,shortness of breath,fatigue,and physical pain ,நோயின் தாக்கம், மூச்சுத்திணறல், சோர்வு, உடல் வலி

ஏற்கனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி மணம்-சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நோயாளிக்கு தகுந்தாற்போல் அறிகுறிகளும், நோயின் தாக்கமும் மாறுபடும். கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரியும் இவ்வாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது புதிதாக கொரோனா பாதிப்பு அறிகுறிகள் குறித்து வெளியாகி உள்ளதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 215 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிட்டதக்கது.

Tags :