Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சிகிச்சை முடிந்து குழந்தைகள் நலமுடன் திரும்பினர்; ராகவா டுவிட்டரில் பதிவு

கொரோனா சிகிச்சை முடிந்து குழந்தைகள் நலமுடன் திரும்பினர்; ராகவா டுவிட்டரில் பதிவு

By: Nagaraj Fri, 05 June 2020 09:10:12 AM

கொரோனா சிகிச்சை முடிந்து குழந்தைகள் நலமுடன் திரும்பினர்; ராகவா டுவிட்டரில் பதிவு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் ஆசிரமத்திற்கு திரும்பி உள்ளனர் என்று ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நடத்தும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இத்தகவலை அவரும் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் குழந்தைகள் அனைவரும் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ragawa,trust children,corona,rescued ,ராகவா, டிரஸ்ட் குழந்தைகள், கொரோனா, மீண்டனர்

இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், "நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர விரும்புகிறேன். எனது குழந்தைகள் ட்ரீட்மெண்ட் முடிந்து பத்திரமாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்ம், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி. எனது சமூக சேவைதான், எனது குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.

Tags :
|
|