கொரோனா மருந்துக்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது; சுகாதார அமைப்பு தகவல்
By: Nagaraj Sat, 16 May 2020 9:33:00 PM
கொரோனா மருந்து கண்டறிய சில காலம் ஆகும்... கொரோனா மருந்துக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவை பயனுள்ளவையா என்பதை அறிய சில காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப தலைவரான மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:
கொரோனா மருந்து குறித்து நூற்றுக்கணக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன, இறப்பை எவ்வாறு தடுக்கிறது, எவ்வளவு பாதுகாப்பானவை, ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பன உள்ளிட்ட ஆய்வுகளின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தற்போது 'ஒற்றுமை சோதனை' ஒன்றை தொடங்கியுள்ளோம். இது சில மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை மையமாக கொண்ட மருத்துவ பரிசோதனையாகும். இவை கொரோனாவுக்கு பாதுப்பானவையா மற்றும் பயனுள்ளவையா என்பதை பார்க்கின்றன. இதற்காக 2,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சோதனையிடப்பட இருக்கின்றனர்.
எந்த சிகிச்சைகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதற்கான முழு பதில்களைப் பெறுவதற்கு சில காலம் எடுக்கும். ஆனால் இப்போது கொரோனாவுக்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் எங்களிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.