Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Fri, 10 July 2020 12:22:52 PM

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 1,387 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

coronavirus,infection,death,treatment ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் இதுவரை 73 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 1,387 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,489 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 479 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|