புதுச்சேரியில் புதிதாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Fri, 03 July 2020 5:05:45 PM
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனாவால் பாதித்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 93 வயது பெண் ஒருவர் நேற்று மாலை அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தார். அவர் சிறுநீரக நோய்த்தொற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. மாகே மற்றும் யானம் பகுதிகளில் புதிதாக யாருக்கும் தொற்று பதிவாகவில்லை.
அதில், 19 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 4 பேர் ஜிப்மரிலும், ஒருவர்
காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி
நேரத்தில் 53 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது, அரசு மருத்துவக்
கல்லூரியில் 241 பேர், ஜிப்மரில் 121, கொரோனா பராமரிப்பு மையங்களில் 22,
காரைக்கால் அரசு மருத்துவமனையில் 29, மாகே அரசு மருத்துவமனையில் எட்டு,
யானம் அரசு மருத்துவமனையில் 2 மற்றும் புதுச்சேரிக்கு வெளியே 4 பேர்
சிகிச்சையில் என மொத்தம் 427 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி
மாநிலத்தில் இதுவரை 824 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 384
பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தொற்றுக்கு 13 பேர் உயிரிழந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.