Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 06 July 2020 1:49:14 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஜூலை 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

india,corona virus,corona prevalence,corona death ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்தியாவில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 20 ஆயிரத்தை கடந்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 425 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, இந்தியா முழுவதும் 6,97,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 4,24,433 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடைய 2,53,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக, 19,693 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|