பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,138 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sun, 28 June 2020 10:40:03 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒரு கோடியை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,883 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா காரணமாக ஒரே நாளில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தற்போது கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.