குவைத்தில் ஒரே நாளில் 751 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Thu, 14 May 2020 00:00:02 AM
குவைத்-ல் புதிதாக 751 பேருக்கு கொரோனா... கொரோனா வைரசின் பாதிப்புகளால் குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோயை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குவைத்தில் புதிதாக 751 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,028 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேர் பலியாகினர்.
இதனால் குவைத்தில் மொத்தம் 82 பேர் பலியானதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குனா தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 162 பேர் குணமடைந்ததாகவும் , நாட்டில் மொத்தம் 3,263 பேர் குணமடைந்ததாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.