Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 938 பேர், கேரளாவில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 938 பேர், கேரளாவில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sat, 30 May 2020 8:00:40 PM

தமிழகத்தில் 938 பேர், கேரளாவில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 938 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 21, 184 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,kerala,corona,half of the population ,தமிழகம், கேரளா, கொரோனா, பாதித்தோர், எண்ணிக்கை

கேரளா: கேரளத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி இன்று (சனிக்கிழமை) புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 624 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|
|