Advertisement

சென்னையில் கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழப்பு

By: Monisha Thu, 02 July 2020 12:00:09 PM

சென்னையில் கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்களின் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 60 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 929 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,coronavirus,influence,kills,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|