Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 143 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 143 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sun, 28 June 2020 3:46:34 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 143 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,624 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.

thiruvannamalai,coronavirus,treatment,influence,kills ,திருவண்ணாமலை,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,பலி

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,624 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 616 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெங்களூருவில் இருந்து 13 பேரும், சென்னையில் இருந்து 7 பேரும், பிற மாவட்டங்களில் வந்தவர்களும் உள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :