Advertisement

பிரேசில் நாட்டில் கொரோனா காரணமாக 60 ஆயிரம் பேர் பலி

By: Karunakaran Thu, 02 July 2020 11:09:24 AM

பிரேசில் நாட்டில் கொரோனா காரணமாக 60 ஆயிரம் பேர் பலி

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

brazil,corona virus,corona prevalence,corona death ,பிரேசில், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகம் முழுவதும் 1 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரத்து 417 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடையவர்களில் 43 லட்சத்து 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 57 ஆயிரத்து 968 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் பாதிப்பில் இருந்து 59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனா காரணமாக 60,713 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிக பலி உடைய நாடுகளில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது.

Tags :
|