Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

By: Monisha Wed, 01 July 2020 10:53:59 AM

புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 174 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாநிலம் முழுவதும் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

coronavirus,influence,death,treatment,curfew ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,ஊரடங்கு

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 174 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 55 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|