Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்தது

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்தது

By: Karunakaran Sun, 28 June 2020 09:31:02 AM

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.98 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

telangana,coronavirus,corona death,corona infection ,தெலுங்கானா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா தொற்று

இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தெலுங்கானாவில் நேற்று 1,087 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 243 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,928 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :