Advertisement

தமிழகத்தில் இதுவரை 9,19,204 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை

By: Monisha Tue, 23 June 2020 10:19:42 AM

தமிழகத்தில் இதுவரை 9,19,204 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டி பதிவாகி வந்ததையடுத்து நேற்று முன்தினம் 2500ஐ தாண்டி பதிவாகியது. ஆனால் நேற்று 2700ஐ தாண்டி பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 2710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனா தொற்றால் 1487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,coronavirus,testing,health department,madras ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பரிசோதனை,சுகாதாரத்துறை,சென்னை

மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1358 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 34,112 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 25,234 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் இதுவரை 9,19,204 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :