- வீடு›
- செய்திகள்›
- அமெரிக்கா மற்றும் பிரேசிலில் ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்கா மற்றும் பிரேசிலில் ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 27 June 2020 12:28:29 PM
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தோன்றிய சீனாவை விட கொரோனா தாக்கம் மற்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. இங்கு கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இருநாடுகளும் போராடி வருகின்றன. தற்போது, அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரசால் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.5 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 663 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் நாளில் 46,907 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 1,055 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளது.