Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 06 Aug 2020 3:37:15 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 15,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.

tiruvallur district,corona virus,infection,death,treatment ,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாநிலமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 15,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,896 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனாவிலிருந்து 11,759 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 3,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|