Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 27 May 2020 09:57:59 AM

தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

india,coronavirus,curfew,dharavi slum,coronavirus confirmed ,இந்தியா,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,தாராவி குடிசைப்பகுதி,கொரோனா தொற்று உறுதி

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|
|