திருவாரூரில் பயிற்சி மருத்துவர் உள்பட 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Sat, 27 June 2020 10:14:12 AM
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 355ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆகவும், பலி எண்ணிக்கை 957 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 295 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355ஆக உயர்ந்துள்ளது.
நன்னிலம் காவல் நிலைய காவலர்கள் 5 பேர், பயிற்சி மருத்துவர் உள்பட 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 131 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.