Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Thu, 28 May 2020 9:27:41 PM

தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.


corona,tamil nadu,vulnerability,notification,promotion ,கொரோனா, தமிழகம், பாதிப்பு, அறிவிப்பு, உயர்வு

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 710. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 117. சென்னையில் மட்டும் இன்று உறுதி செய்யப்பட்டோர் 559.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,548 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|