Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே மருத்துவமனையில் பணி புரிந்த 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஒரே மருத்துவமனையில் பணி புரிந்த 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 05 June 2020 09:53:09 AM

ஒரே மருத்துவமனையில் பணி புரிந்த 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தெலங்கான மருத்துவர்கள் சங்க தலைவர் உமா நாகேந்திர விஷ்ணு கூறுகையில், தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த உஸ்மானிய மருத்துவமனை மருத்துவர்கள் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலரது பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை.

india,telangana,doctors,corona virus,confirm infection ,இந்தியா,தெலங்கானா,மருத்துவர்கள்,கொரோனா வைரஸ்,தொற்று உறுதி

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அவர்களை 7 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சுதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பல சுகாதார ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சப்படுகின்றனர் என தெரிவித்த அவர் இதனால் அரசு ஏற்கனவே அறிவித்தபடி விருப்பமுள்ள சுகாதார ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகளை வழங்கவேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags :
|