Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 29 June 2020 6:15:05 PM

விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகுது. நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1079 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நோய் பாதிப்பில் இருந்து மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிவகாசி காந்திரோடு பகுதியில் வசிக்கும் 60 வயதான முன்னாள் நகரசபைதலைவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

virudhunagar,coronavirus,infected,killed,treated ,விருதுநகர்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது. 2,346 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிய வேண்டிய நிலையில் மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18,779 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2,346 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 170 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 450 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|