Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

By: Monisha Mon, 22 June 2020 6:02:29 PM

திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

tamil nadu,coronavirus,influence,thiruvannamalai ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,திருவண்ணாமலை

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது திருவண்ணாமலையில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து உள்ளது. தொற்று 1,060 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் இதுவரையில் 455 பேர் குணம் அடைந்து உள்ளனர். 598 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் இன்று திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.

Tags :