Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Tue, 09 June 2020 11:00:40 AM

கர்நாடகத்தில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று புதிதாக 308 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 277 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,695 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோயாளிகள் மரணம் அடைவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

karnataka,corona damage,bangalore,corona test ,கர்நாடகா,கொரோனா பாதிப்பு,பெங்களூரு,கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை 3 லட்சத்து 93 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரத்து 477 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. இருப்பினும், மரண விகிதத்தில் பெங்களூரு முதல் இடத்திலே உள்ளது.

நேற்று மட்டும் கர்நாடகாவில் 8 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக கொரோனா பாதித்தவர்களில் கலபுரகியில் 99 பேர், யாதகிரியில் 66 பேர், பீதரில் 48 பேர், உடுப்பியில் 45 பேர், பெங்களூரு நகரில் 18 பேர், பல்லாரியில் 8 பேர், கதக்கில் 6 பேர், சிவமொக்காவில் 4 பேர், தார்வாரில் 4 பேர், ஹாசனில் 3 பேர், தட்சிண கன்னடாவில் 3 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், கொப்பல், ராமநகரில் தலா ஒருவர் என 308 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags :