Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Sun, 21 June 2020 11:07:19 AM

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு உள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 89 லட்சத்து 13 ஆயிரத்து 524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

brazil,coronavirus,corona death,america ,பிரேசில்,கொரோனா வைரஸ்,கொரோனா பலி,அமெரிக்கா

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட 37 லட்சத்து 8 ஆயிரத்து 889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 54 ஆயிரத்து 503 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அங்கு கொரோனா காரணமாக 10 லட்சத்து 70 ஆயிரத்து 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் பிரேசிலில் 31 ஆயிரத்து 571 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று மட்டும் அங்கு 968 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|