இலங்கையில் மேலும் 274பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு
By: Nagaraj Sat, 28 Nov 2020 10:39:52 PM
மேலும் 274 பேருக்கு கொரோனா... நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 775ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 430பேர் வீடுகளுக்குத்
திரும்பியுள்ள நிலையில் இதுவரை 16 ஆயிரத்து 656பேர் தொற்றிலிருந்து
மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 12 பேர் தொடர்ந்தும்
வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.