Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை தாராவியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

மும்பை தாராவியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

By: Monisha Fri, 22 May 2020 10:41:26 AM

மும்பை தாராவியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நேற்றய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

mumbai,dharavi,maharashtra,corona virus,day by day increase ,மும்பை,தாராவி,மகாராஷ்டிரா,கொரோனா வைரஸ்,நாளுக்கு நாள் அதிகரிப்பு

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றய நிலவரப்படி, மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|