Advertisement

தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Tue, 26 May 2020 09:02:21 AM

தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

மேலும் 549 பேருக்கு கொரோனா... சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாய் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,731 ஆக உயர்ந்துள்ளது.

increase,corona,affect,count,madras ,
அதிகரிப்பு, கொரோனா, பாதிப்பு, எண்ணிக்கை, சென்னை

இந்நிலையில், சென்னையில் ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது.
தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதும, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் இருப்பதும் கொரோனா பரவலுக்கு காரணமாகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|