Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: Monisha Mon, 09 Nov 2020 7:05:54 PM

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான இன்றய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்து 079 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

நோய் தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 308 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரத்து 892 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

Tags :