Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இன்று 11 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலி

சென்னையில் இன்று 11 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலி

By: Monisha Thu, 11 June 2020 2:55:07 PM

சென்னையில் இன்று 11 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 357 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8102 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 141029 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் அதிகபட்ச பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

india,tamil nadu,coronavirus,madras,kills ,இந்தியா,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,பலி

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேர், ரெயில்வே மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் என 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதன் காரணமாக இன்று மட்டும் இதுவரை சென்னையில் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியாகி இருக்கின்றனர்.

Tags :
|
|